ஜோர்ஜ் டவுன், மே 23 – பினாங்கு, தஞ்சோங் பூங்காவிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றின் 21-வது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் பெண் ஒருவர், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அந்த 24 வயது பெண், தலைநகரிலுள்ள, தனியார் உயர்கல்விக்கூடம் ஒன்றின் மாணவி ஆவார்.
நேற்று மாலை மணி 3.35 வாக்கில், பொதுமக்களால் அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அப்பெண், தனது 24 வயது நண்பருடன், தங்கும் விடுதிக்கு சென்ற சிறிது நேரத்தில், அதன் 21-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
எனினும், சம்பவ இடத்தில் பொது மக்கள் கூடியிருப்பதை கண்டு, எதார்த்தமாக அவ்விடத்திற்கு சென்ற பின்னர் தான், இறந்து கிடப்பது தனது தோழி என்பதை சம்பந்தப்பட்ட ஆடவன் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அச்சம்பவத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, திமோர் டாவுட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரஸ்லாம் அப்துல் ஹமிட் கூறியுள்ளார்.
அதனால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளனர்.