![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-19-Jun-2024-07-07-PM-4639.jpg)
பினாங்கு, ஜுன் 19 – இன்று ஜுன் 19 ஆம் திகதி தொடங்கி ஜுன் 21 வரையில், மித்ராவின் ஏற்பாட்டில் பினாங்கு சுங்கைப் பாக்காப் இந்தியர்களுடனான நல்லிணக்கச் சந்திப்பு ஒன்று ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
Perkarangan Dewan Orang Ramai Badar Tasek Mutiara-வில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பின் நோக்கம், இந்திய சமூகத்துடன் நெருங்கி பழகுவது மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கமளிக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்திற்கு உதவி திட்டங்களை மேற்கொண்டு வரும் தெக்குன் நேஷன்ல் (Tekun Nasional), அமானா இக்தியார் மலேசியா (Amanah Ikhtiar Malaysia), பேங்க் ரக்யாட் (Bank Rakyat), பேர்கேசோ சமூக நல திட்டத் துறை (Jabatan Kebajikan Malaysia Perkeso), DHRAA ஆகிய நிறுவனங்கள் இந்த சந்திப்பின்போது உங்களுக்கு விளக்கமளிக்க காத்திருக்கின்றன.
ஆக, பினாங்கு சுங்கை பாக்காபில் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார இந்திய மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டு இந்த அமைப்புகள் ஏற்படுத்தீ தரும் உதவி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வரவேற்கப்படுகின்றனர்.