கோலாலம்பூர், ஏப் 19 – பினாங்கில் ,பயான் லெபாஸில், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் உள்ள சுங்கை திரம் மேம்பாலத்தில் இருந்து 30 மீட்டர் தொலைவில் கீழே விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் இறந்தார்.
27 வயதான அந்த ஆடவர் , தனியாக Bayan Baru விலிருந்து Bayan Lepas உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, நேற்று மாலை மணி 4.10 மணியளவில் நடந்த அந்த விபத்தில் மரணம் அடைந்ததாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அந்த ஆடவர் மேம்பாலத்தை அடைந்தபோது, அவர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி, மேம்பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து தலையில் பலத்த காயத்திற்கு உள்ளானார். சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் அவர் இரவு 9.45 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது.