சிரம்பான், ஏப்ரல்-28, நெகிரி செம்பிலான், Jalan Paroi-Senawang அருகே Sungai Linggi-யில் வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முதியவர், ஆற்றில் மிதந்து வந்த பொருள் ஆடவரின் அழுகியச் சடலம் என்பதை அறிந்து அதிர்ந்துப் போனார்.
உடனடியாக போலீசுக்கு அவர் தகவல் கொடுக்க, தடயவியல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டது.
பிற்பகல் 2 மணி வாக்கில் சட்டையில்லாமல் கிடந்த அடையாளம் தெரியாத அவ்வாடவரின் சடலத்தின் நிலையை வைத்துப் பார்க்கும் போது, அவர் இறந்து 24 மணி நேரங்களைக் கடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அவர் உள்ளூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவராக இருக்கலாம் என சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohamad Hatta Che Din கூறினார்.
பச்சைக் குத்தியிருந்தாலும், உடல் அழுகிப்போனதால் அதனைச் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.
அதோடு, வேறு எங்கிருந்தோ ஆற்று நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக Mohamad Hatta சொன்னார்.
அது ஒரு கொலையாகவும் இருக்கலாம் அல்லது மீன் பிடித்துக் கொண்டிருந்தவர் ஆற்றில் விழுந்தும் இறந்திருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் தடயவியல் அறிக்கைக் கிடைத்ததும் துப்புத் துலங்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாராவது காணாமல் போயிருந்தால் தகவல் கொடுக்குமாறு பொது மக்களையும் Mohamad Hatta கேட்டுக் கொண்டார்.