Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயாவில், ஆட்டிசம் குறைப்பாடுடைய 6 வயது சிறுவனைத் தாக்கிய குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் ஆசிரியர்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 – சிசிறப்பு தேவைகள் உடைய சிறுவர்கள் பராமரிப்பு மையத்தில், ஆட்டிசம் குறைப்பாடுடைய ஆறு வயது சிறுவனை தாக்கியதாக, ஆசிரியர் ஒருவருக்கு எதிராக பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், 33 வயது தினேஷ் எனும் அந்த ஆசிரியர், தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

ஜூலை 16-ஆம் தேதி, காலை மணி 11.50 வாக்கில், ஜாலான் SS7/13A எனும் இடத்திலுள்ள பராமரிப்பு மையம் ஒன்றில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்று மாதங்கள் சிறை அல்லது ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் தினேஷ் நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட்டு 27-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை செய்த புகாரை அடுத்து, இம்மாதம் 17-ஆம் தேதி, அம்பாங்கில் ஆசிரியர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டதை, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஷாருல்நிசாம் ஜாப்பார் ( Shahrulnizam Ja’afar ) உறுதிப்படுத்தியிருந்தார்.

அச்சிறுவன், எட்டி உதைக்கப்பட்டு, நாற்காலியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதோடு, அவரது கையில் கடிக்கப்பட்ட காயமும் தென்படுவது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!