Latestமலேசியா

பெண்ணிடம் மர்ம உறுப்பைக் காட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் கைது; பொது மக்கள் சுற்றி வளைத்தனர்

ஷா ஆலாம், ஏப்ரல் 20 – சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 26, புக்கிட் பெலிம்பிங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சம்பவத்தில், ஆடவர் ஒருவர் பொது இடத்தில் வைத்து தனது மர்ம உறுப்பைக் காட்டி பெண்ணை மிரளச் செய்தார்.

மதுபோதையில் இருந்த 46 வயது அந்நபரைப் பொது மக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

அந்நபரின் அநாகரிகச் செயலால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணிடம் இருந்து இரவு 11 மணி வாக்கில் புகாரைப் பெற்றதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohd Iqbal Ibrahim கூறினார்.

சந்தேக நபர், கிள்ளானில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் மனநல சிகிச்சைப் பெற்று வருவது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும், குற்றவியல் சட்டத்தின் 377D பிரிவில் கீழ் மேல் விசாரணைகள் நடைபெறுவதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் மர்ம உறுப்பைக் காட்டி விட்டு அந்நபர் காரில் தப்பியோட முயல்வதும், பொது மக்கள் சுற்றி வளைத்து அவரைப் பிடிப்பதும் அதனால் அப்பகுதி பரபரப்பானதும் வைரலாகியுள்ள காணொலிகளில் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!