சென்னை, ஜன 14 – தமிழகத்தில் போகி பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததன் மூலம், சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், கடும் புகைமூட்டத்தின் காரணமாக விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடுவதும் தரையிறங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், லண்டன் மற்றும் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்க்கு திரும்பியுள்ளன.
இதற்கிடையில், சென்னையில் இருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் 16 உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் 8 வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புகைமூட்டம் சீரான பிறகு விமான சேவைகள் சீரடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.