Latestமலேசியா

போலி கடப்பிதழ் கும்பலை சபா எம்.ஏ.சி.சி முறியடித்தது; அமலாக்க அதிகாரிகள் மூவர் கைது

கோத்தா கினபாலு, ஜூலை 17 – கடப்பிதழை போலியாக்கும் கும்பல் ஒன்றை சபா MACC முறியடித்திருக்கிறது. சுமார் ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட வேவு நடவடிக்கையின் மூலம் அந்த போலி கடப்பிதழ் கும்பல் முறியடிக்கப்பட்டதோடு அரசாங்க அமலாக்க துறையின் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 2023 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த அந்த கும்பலிடமிருந்து அந்த மூவரும் சுமார் 300,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதும் தெரியவந்துள்ளது. 40 முதல் 50 வயதுடைய அந்த மூன்று ஆடவர்களும் சபா MACC அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வாக்குமூலம் வழங்க முன்வந்தபோது கைது செய்யப்பட்டதாக MACC க்கு அணுக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை செயல்பட்ட அந்த சந்தேக பேர்வழிகள் அனைவரும் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு நபரிடமும் 3,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டதை சபா MACC தலைவர் டத்தோ S. கருணாநிதி (Karunanithy ) உறுதிப்படுத்தினார். அதோடு மேலும் பலர் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!