![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/police.jpeg)
கோலாலம்பூர், ஜூன் 7 – இரு வங்காளதேசிகளிடம் போலீஸ்காரர்களாக நடித்து கூட்டாக கொள்ளையிட்ட உள்நாட்டைச் சேர்ந் மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்கள் மீது ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் இரண்டு நீதிமன்றங்களில் தனித்தனியாக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக செஷன்ஸ் நீதிபதி டத்தோ நுவா அமான் ( Dato Nua’aman) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர். கடந்த மே மாதம் 19ஆம் தேதி இரவு மணி 11. 20 அளவில் முதல் குற்றச்சாட்டை புரிந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதன்பிறகு 29 வயதுடைய மற்றொரு வங்காளதேச ஆடவனிடம் கூட்டாக கொள்ளையிட்டதாக அந்த ஐவருக்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குத்தகை தொழிலாளியான அந்த நபரை மிரட்டி மே மாதம் 12 ஆம்தேதி பிரிக்பீல்ட்ஸ் , சென்ட்டரல் Menara Shell-லில், RHB Bank- கில் கொள்ளையிட்டதாக மற்றொரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. முதல் குற்றச்சாட்டு தண்டனை சட்டத்தின் 395 ஆவது விதியின் கீழ் மற்றும் தண்டனை சட்டத்தின் 170ஆவது விதியின் கீழ் அவர்கள் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.