Latestமலேசியா

போதைப்பொருள் விநியோகத்தால் வாங்கி குவித்த 1 மில்லியன் சொத்துகள் பறிமுதல்; திரங்கானுவில் ஆடவர் கைது

குவாலா திரங்கானு, மே-1, போதைப்பொருள் விநியோகத்தால் வந்த வருமானத்தின் மூலம் வாங்கி குவித்ததாக நம்பப்படும் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் சொத்துகளை திரங்கானு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

அவை, 3 கார்கள், ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு நகைகள் என மொத்தம் 981,500 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களாகும்.

1.02 கிலோ கிராம் எடையில் 32,000 ரிங்கிட் மதிப்பிலான ஷாபு வகை போதைப்பொருளுடன்,ஏப்ரல் 28-ஆம் தேதி உள்ளூர் ஆடவர் பிடிபட்ட போது இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அப்போதைப்பொருள் திரங்கானுவில் சுமார் 6,000 பேருக்கு விநியோகம் செய்யப்படவிருந்தவையாகும்.

அழகுசாதனப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருபவரான 35 வயது அவ்வாடவர், கம்போங் பாயா கெலாடியில் செயல்படாத ஒரு கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைதானார்.

பறிமுதல் செய்யப்பட்டவற்றில் Toyota Alphard, Mini Cooper Countryman, Range Rover கார்கள், 7,700 ரிங்கிட் ரொக்கம், தங்கக் காப்பு, கழுத்துச் சங்கிலி, கால் காப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.

சந்தேக நபருக்கு பழையை குற்றப்பதிவுகள் இல்லை; இருந்த போதிலும் கைதான போது அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தார்.

மே 5 வரை அவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!