Latestமலேசியா

மலாக்காவில் தனது முதலாளியை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்கா, ஜன 2 – மலாக்கா சுங்கை ஊடாங்கில் உள்ள செம்பனை தோட்டத்திலுள்ள ஒரு வீட்டில் டிசம்பர் 22 ஆம் தேதி தனது முதலாளியை கொலை செய்த குற்றத்தின் தொடர்பில் இந்தோனேசிய ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். டிசம்பர் 30ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் , Klang, Bandar Sultan Sulaiman னிலுள்ள வீட்டில் 25 வயதுடைய சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டான் என Melaka Tengah போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார். தலை மற்றும் கழுத்தில் இரண்டு காயங்களுடன் 71 வயதுடைய ஆடவர் செம்பனை தோட்டத்திலுள்ள வீட்டில் இறந்துகிடந்ததை அதிகாலை மணி 1.20 அளவில் போலீசார் மீட்டனர் .

டிசம்பர் 22 ஆம் தேதி முதல் அந்த ஆடவரை அவரது மகன் தொடர்பு கொள்ள முயன்றும் அம்முயற்சி வெற்றியளிக்காததால் அவர் போலீசில் புகார் செய்தார். அந்த ஆடவர் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு தோட்டத்திலுள்ள வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அந்த ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு சொந்தமான தோள்பேக், கை தொலைபேசி, Touch ‘n Go Card மற்றும் காணாமல்போன அவரது மகனின் Ford Ranger வாகனமும் கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக Christopher Patit கூறினார். தனது முதலாளி திட்டிய காரணத்தினால் அவரை அந்த சந்தேகப் பேர்வழி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!