மலாக்கா, பிப் 21 – மலாக்கா, Air Keroh Wonderland நீர் பூங்காவில் வருகையாளர்களுக்கு நேற்று ஒரு நாள் இலவச நுழைவு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி அளவுக்கு அதிகமானோர் அந்த நீர்ப்பூங்காவுக்கு திரண்டதால் அங்கு தகராறு ஏற்பட்டது. நேற்று காலை மணி 10.30 மணி முதல் 11 மணி வரை அந்த நீர் பூங்காவின் நுழைவுப் பகுதியில் தகராறு மூண்டதாக Melaka Tengah OCPD கிறிஸ்டோபர் படிட் தெரிவித்தார். அந்த நுழைவு மையத்தில் ஒவ்வொருவரும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
எனினும் தக்க சமயத்தில் அந்த நீர்ப் பூங்காவின் நிர்வாகம் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததால் தேவையற்ற அசாம்பாவிதங்கள் ஏற்படும் சூழ்நிலைய தடுக்கப்பட்டதாக Chritopher Patit கூறினார். இதனிடையே நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை அந்த நீர்ப்பூங்காவுக்கு கிட்டத்தட்ட 7,000 பேர் வருகை புரிந்ததாக மலாக்கா Wonderland Theme Park தலைமை செயல் அதிகாரி Seow Cheng Swee தெரிவித்தார்.