கோலாலம்பூரில், டிச 29- மலேசியாவில் கோவிட் -19 தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதோடு அதன் அறிகுறிகள் குறைவாகவே இருப்பதாகவும் அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவையில்லையென்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார். டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 51ஆவது வாரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோவிட் நோயாளிகளின் எண்ணக்கை 0.5 விழுக்காடாகும். அதே போன்று மரண விகிதம் 0.08 என்ற நிலையில் இருந்ததாக அவர் கூறினார். இன்று வரை மலேசியாவில் கோவிட் 19 புதிய திரிபுகள் எதுவும் உருவாகவில்லை என சுல்கிப்ளி தெரிவித்தார். அதே வேளையில் பொதுமக்கள் தூய்மைக்கும், முகக் கவசத்திற்கும் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
21 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
21 hours ago