Latestமலேசியா

மலேசிய கடல் பகுதியில் ஊடுருவிய 5.4 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய மூன்று வியட்னாமிய படகுகள் தடுத்து வைப்பு

பாசீர் பூத்தே, ஏப் 22 – மலேசிய கடல் பகுதியில் ஊடுருவிய வியாட்னாமைச் சேர்ந்த 5 . 4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய மூன்று வியட்னாமிய மீன்பிடி படகுகள் தடுத்து வைக்கப்பட்டன. பாசீர் பூத்தே தோக் பாலியிலிருந்து 124 கடல் மைல் முதல் 135 கடல் மைல் பகுதியில் அந்த மூன்று படகுகளை மலேசிய கடல் அமலாக்க நிறுவனம் தடுத்து நிறுத்தியுள்ளது. மலேசிய – வியட்னாம் கடல் எல்லைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது அந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் கிளந்தான் மாநில இயக்குனர் Erwan Shah தெரிவித்தார். இவ்வாண்டு பறிமுதல் செய்யப்பட்ட மிகப் பெரிய அளவிலான வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அவை என அவர் கூறினார்.

அந்த மூன்று படகுகளிலிருந்து 8,700 கிலோ மீன்கள், மீன்பிடிக்கும் கருவிகள், 2,900 லிட்டர் டீசல் எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகுகளிலிருந்த டீசல் எண்ணெயை பார்க்கையில் அப்படகுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மலேசிய கடல் பகுதில் இருந்திருக்கக்கூடும் என Tok Bali யில் நடைபெற்ற செய்தியளார் கூட்டத்தில் Erwan Shah தெரிவித்தார். இந்த நடவடிக்கையின்போது அந்த மூன்று மீன்பிடி படகுகளைச் சேர்ந்த 40 ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!