மாரான், ஏப்ரல் 25 – பஹாங், மாரான், ஜெங்கா 14-லிலுள்ள, செம்பனை தோட்டத்தில், மரத்தடியில் மழைக்கு ஒதுங்கியிருந்த இந்தோனேசிய ஆடவர் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் மணி 1.30 வாக்கில், அடை மழை பெய்துக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மாரான் போலீஸ் தலைவர் டெப்புட்டி சுப்ரிடெண்டன் முஹமட் ஜம்ரி முஹமட் ஜாபிர் தெரிவித்தார்.
அச்சம்பவத்தில், இந்தோனேசியா, லொம்போக்கை சேர்ந்த 40 வயது கமருடின் என்பவர் உயிரிழந்த வேளை ; உடன் இருந்த அவரது நண்பர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திடீரென ஏற்பட்ட பேரிரைச்சலை தொடர்ந்து, தலையில் மின்னல் தாக்கில் கமருடின் உயிரிழந்ததை தாம் நேரில் கண்டதாக, சம்பந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.
நேற்று மாலை மணி 5.39 வாக்கில் அச்சம்பவம் தொடர்பில், புகார் செய்யப்பட்ட வேளை ; உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டனர்.
சடலம் சவப்பரிசோதனைக்காக, ஜெங்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.