Latest

மீண்டுமொரு கொடூரம்; கெடாவில் வயது குறைந்த பிள்ளைக் கற்பழிப்பு; 3 மாணவர்கள் உட்பட நால்வர் கைது

வாஷிங்டன், அக் 16-

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உங்களுக்குத் தெரியும், நீங்கள் அதை உடனடியாகச் செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, இந்த செயல்முறை விரைவில் முடிவடையும் என அவர் கூறியதாக டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

டிரம்ப் வெளியிட்ட இந்த தகவலை இந்தியா உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. உக்ரைய்ன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள போதிலும் , இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை மோடி முன்பு தற்காத்து பேசியிருந்தார்.

ஆனால், புதிய அமெரிக்க தூதரும் , டிரம்பின் நெருங்கிய அரசியல் உதவியாளருமான செர்ஜியோ கோர் சனிக்கிழமை புதுடில்லிக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரை சந்தித்ததன் மூலம் டிரம்புடனான உறவை சரிசெய்ய மோடி விருப்பம் காட்டியதாகத் தெரிகிறது.

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது நீண்ட காலம் பிரதமராக இருக்கும் மோடியுடனான தனது உறவுக்கு மரியாதை செலுத்துவதாக வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் டிரம்ப் தெரிவித்தார். மோடி “ஒரு சிறந்த மனிதர். அவரது அரசியல் வாழ்க்கையை தாம் அழிக்க விரும்பவில்லையென்றும் டிரம்ப் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!