தைப்பிங், மார்ச் 11 – WCE எனப்படும் மேற்குக்கரை கரையோர நெடுஞ்சாலையில் தைப்பிங் முதல் பெருவாஸ் வரை இன்று நள்ளிரவு தொடங்கி எதிர்வரும் மே மாதம் 11 ஆம் தேதிவரை இரு மாதங்களுக்கு Toll கட்டணம் இன்றி பயணம் செய்யமுடியும் . Ramadan மற்றும் அடுத்த மாதம் நோன்பு பொருநாள் காலத்தை முன்னிட்டு அந்த நெடுஞ்சாலை தடத்தில் Toll கட்டணம் இன்றி இலவசமாக பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பணி அமைச்சர் டத்தோஸ்ரீ Alexander Nanta Linggi தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு மணி 12.01 அளவில் WCE நெடுஞ்சாலை திட்டத்தின் தென் தைப்பிங் Multi level சந்திப்பு சாலையிலிருந்து பெருவாஸ் சாலை சந்திப்பு வரையிலான Section 11 பகுதி திறக்கப்பட்டதை முன்னிட்டு அவர் இதனை அறிவித்தார். பேராக்கில் ஒட்டுமொத்த மேற்குக்கரையோர நெடுஞ்சாலை பகுதியான Section 11 முழுமையான நிர்மாணிக்கப்பட்டு விட்டதாகவும் அவை செக்சன் 8,9,10 மற்றும் 11 ஆகியவற்றை முழுமையாக உள்ளடக்கியிருப்பதாக அவர் கூறினார்.
Ramadan மற்றும் Aidilfitri- யை முன்னிட்டு இன்று நள்ளிரவு மணி 12.01 முதல் மே 11ஆம் தேதிவரை இலவச Toll வசதி வழங்கப்பட்டிருப்பது குறித்து WCE நெடுஞ்சாலை நிறுவனத்திற்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம் என Alexander Nanta கூறினார். பேரா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ Saarani Mohamad இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்சியில் Saarani Mohamad மற்றும் அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ Hasnol Zam Zam Ahmad தெரிவித்தார்.