கோலாலம்பூர், ஜன 3 – லஞ்சக் குற்றத்திற்காக முன்னாள் நீதிபதி ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை, ஒரு நாள் சிறையாக ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் குறைக்கப்பட்டது.
50 வயதுடைய அஸ்மில் முந்தபா அபாஸ், என்ற அந்த நீதிபதிக்கு விதிக்கப்பட்ட 25,000 ரிங்கிட் அபராதமும் 12,000 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது. அதே வேளையில் 12,000 ரிங்கிட் அபராத தொகையை செலுத்தத் தவறினால் அஸ்மில் மூன்று மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி ஷா ஆலாம் உயர் நீதிமன்ற நீதிபதி ஹஸ்புல்லா ஆடாம் உத்தரவிட்டார்.