ஷா ஆலாம், நவம்பர் 24 – கார் கழுவும் இடத்திலிருந்து, ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் காரைத் திருடியதாகக் கூறப்படும் 26 வயது ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
கடந்த திங்கட்கிழமை இரவு மணி 9.30 வாக்கில், சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் செய்த புகாரை தொடர்ந்து அவன் கைதுச் செய்யப்பட்டதை, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் ACP முஹமட் இக்பால் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
கார் கழுவும் இடத்தின் ஊழியர் என நம்பப்படும் ஒருவனிடம், காரின் உரிமையாளர் அதன் சாவியை கொடுத்துள்ளார். எனினும், அவன் அக்காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், நேற்றி காலை அவ்வாடன் கெடா, பொக்கோக் செனாவில் கைதுச் செய்யப்பட்ட வேளை ; அவனிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டதை, இக்பால் உறுதிப்படுத்தினார்.
கைதுச் செய்யப்பட்ட போது அவ்வாடவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்த வேளை ; அவனுக்கு எதிராக இரு பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக இன்று தொடங்கி அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் அதிகபட்சம் ஏழாண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
முன்னதாக, கார் கழுவும் இடத்திலிருந்து, ஆடவன் ஒருவன் காரைத் திருடிக் கொண்டு கம்பி நீட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.