Latestமலேசியா

20.1 மில்லியன் சுற்றுப்பயணிகள், கடந்தாண்டு நாட்டிற்கு வருகை புரிந்தனர்

கோலாலம்பூர், மார்ச் 11 – கடந்தாண்டு நெடுகிலும், இரண்டு கோடியே பத்து லட்சம் சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகை புரிந்தனர்.

அதன் வாயிலாக, ஏழாயிரத்து 130 கோடி ரிங்கிட் வருமானம் ஈட்டபட்டதாக, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணை அமைச்சர் கைருல் பிர்டாவுஸ் அக்பார் கான் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, இவ்வாண்டு, நாட்டிற்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இரண்டு கோடியே 73 லட்சமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படும் வேளை ; 12 ஆயிரத்து 270 கோடி ரிங்கிட் வருமானமாக ஈட்டப்படுமென கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக, துணையமைச்சர் சொன்னார்.

மாநில அரசாங்கங்களுடனும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது.

அதன் விளைவாக, இதுவரை மலாக்கா, பெர்லீஸ், கிளந்தான், பேராக் ஆகிய மாநிலங்கள், மாநில சுற்றுலா ஆண்டை பிரகடனப்படுத்தியுள்ளதையும், மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது துணையமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!