![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-01-Apr-2024-02-20-PM-9892.jpg)
சிங்கப்பூர், ஏப்ரல் 1 – 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் வருகையால் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
எனவே, அதற்கேற்ப குடிமக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூர் மீண்டும் தங்கள் நாட்டு மக்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
இதற்காக முழுநேர டிப்ளமோ படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கல்வியைப் படிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கட்டணச் சலுகையும் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.