![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-12-Apr-2024-03-02-PM-1000.jpg)
கோலாலம்பூர், ஏப் 12 – ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ள தேர்ந்ததெடுக்கப்பட்ட ஏழு மக்கள் பிரதிநிதிகள் இனியும் பெர்சத்துவின் உறுப்பினர்கள் அல்ல என அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Razali Indris தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கான அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கும்வரை காத்திருக்காமல் அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலக வேண்டும். பெர்சத்துவின் சட்டத்திருத்தத்திற்கு சங்கங்களின் பதிவதிகாரி அங்கீகரித்ததைத் தொடர்ந்து அந்த எழுவரின் உறுப்பினர் நிலை ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக Razali Idris தெரிவித்தார்.
சங்கங்களின் பதிவதிகாரி அங்கீகரித்த கட்சியின் சட்ட திருத்தங்களின் நோட்டிசுடன் அதனை தெரிவிக்கும் கடிதத்தையும் கட்சி அவர்களுக்கு அனுப்பிவைக்கும் என அவர் கூறினார். எனவே அந்த எழுவரும் பெர்சத்துவிடமிருந்து கடிதம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டுடியதில்லை. உண்மையிலேயே பண்புள்ள மனிதர்களாக இருந்தால் அவர்கள் விலகி தங்களது தொகுதிகளை காலி செய்ய வேண்டும் என Razali Idris கேட்டுக்கொண்டார். கட்சியின் நிலைக்கு எதிரான போக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் கொண்டிருந்தால் அவர்களின் உறுப்பினர் தகுதியை கட்சி நீக்குவதற்கு அனுமதிக்கும் பெர்சத்து சட்டத்தின் திருத்தங்களை சங்கங்களின் பதிவகம் ஏப்ரல் 2ஆம்தேதி அங்கீகரித்துள்ளதாக Razali Idris தெரிவித்தார்.