Latestமலேசியா

6 கோடியாக இரட்டிக்கும் இந்திய வியாபாரிகளுக்கான ‘ஸ்புமி’ நிதி உதவி – டத்தோ ரமணன்

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – தெக்குன் நிதியகத்தின் இந்திய வியாபாரிகளுக்கான ‘ஸ்புமி’ கடனுதவி 6 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக, தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இன்று அறிவித்தார்.

வர்த்தகத் துறையில் அதிகமான இந்தியர்கள் பயன்பெறும் வகையில் வருடாந்திர நிதியாக ‘ஸ்புமி’-யின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த 3 கோடி, தற்போது ‘SPUMI GOES BIG’ கீழ் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ‘ஸ்புமி’-க்கும், ‘SPUMI GOES BIG’-க்கும் இடையிலான வேறுபாடு குறித்து விளக்கமளித்தார், டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்.

இந்திய வணிகர்கள் வணிகத்தில் கால்பதிப்பதை ஊக்குவிப்பதோடு, அவர்களை பொருளாதார ரீதியில் வலிமையானவர்களாகவும், சமுதாயத்தில் வெற்றிப் பெற்றவர்களாகவும் உருமாற்றும் இலக்கைத் இத்திட்டம் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் இந்திய தொழில்முனைவோர் பயனடையவுள்ள இக்கடனுதவிக்கு, விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொண்டார்.

மடானி பொருளாதார கட்டமைப்பின் வழி, இந்திய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதிச் செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் நன்முயற்சிதான் இத்திட்டம்.

ஆக, சிறு நடுத்தர வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள், இக்கடனுதவியின் வழி தங்களின் வர்த்தகத்தை உயர்த்திக் கொள்ளும் நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரமணன்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!