பாசீர் மாஸ் , டிச 22 – ரந்தாவ் பஞ்சாங்கில் தாமான் ரந்தாவ் பாருவுக்கு அருகேயுள்ள சதுப்பு நிலப்பகுதியில் 15 மாத குழந்தை ஒன்று நீரில் மூழ்கி இறந்தது. தாய்லாந்து பிரஜையான அக்குழந்தையின் உடல் பிற்பகல் மணி 2.20 அளவில் மீட்கப்பட்டதாக ரந்தாவ் பஞ்சாங் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் ஷபாவி ஸ்டாபா தெரிவித்தார்.
அந்த குழந்தை காணவில்லை என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நீர் மீட்பு குழுவினர் அக்குழந்தையை கண்டுப்பிடித்ததாக அவர் கூறினார்.