![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-24-Nov-2023-11-26-AM-902.jpg)
அலோஸ்டார், நவ 24 – கெடா, குவாலா கெடாவிலுள்ள கம்போங் டெபெங்காவ் தேபி லாவுட் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருவகை கம்பளி புழுக்களின் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். தங்களின் தினசரி வாழ்க்கைக்கு இடையூறாக அந்த கம்பளி புழுக்கள் இருப்பதாகவும் 2016ஆம் ஆண்டு அந்த புழுக்களை துடைத்தொழிப்பதற்கு அரசாங்க உதவி கிடைத்ததுபோல் இப்போதும் அரசாங்கத்தின் உதவி தேவைப்படுவதாக அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். கருப்பு நிறத்திலான அந்த புழுக்கள் உடலில் பட்டவுடன் அரிப்பை ஏற்படுத்துவதோடு தாவரங்களின் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பாக இருப்பதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்