Latestமலேசியா

27 முறை கத்திக் குத்துக்கு உள்ளான உணவு விற்பனையாளர் மரணம் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், டிச 6 -பினாங்கு ஜோர்ஜ்டவுன், ஜாலான் பேராக்கில் ஒர் அடுக்ககத்தின் கார் நிறுத்தும் பகுதியில் 27 முறை கத்திக் குத்துக்கு உள்ளான ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகப் பேர்வழி அந்த ஆடவரை கத்தியால் குத்தியபோது மற்றொரு சந்தேகப் பேர்வழி மோட்டார் சைக்கிளில் காத்திருந்ததாக பினாங்கு தீமோர் லாவுட் போலீஸ் தலைவர் வி. சரவணன் தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 6.18 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றதாக அவர் கூறினார். நெஞ்சு , கழுத்து மற்றும் உடலின் பல பாகங்களில் கத்திக் குத்துக்கு உள்ளான 60 வயதுக்கு மேற்பட்ட அந்த ஆடவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் சிசிக்சையின்போது அவர் இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து காணொளி லிப்ட் மற்றும் அந்த அடுக்ககத்தின் பாதுகாவலர் அறையில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் தேடி வருகின்றனர். அந்த ஆடவரின் பணம் மற்றும் இதர பொருட்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இச்சம்பவத்திற்கு திருடு காரணம் இல்லையென்று சரவணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!