
செப்பாங், மே 27 – போலீஸ்காரர்கள்போல் நடித்து வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் செமினியில் ஒரு வீட்டைக் கொள்ளையடித்த அதே நபர்கள்தான் இப்போது கைதான சந்தேக நபர்கள் என்று நம்பப்படும் இந்த சம்பவம் வைரலானது. 33 முதல் 38 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் மே 24 ஆம் தேதியன்று சிலாங்கூர் மற்றும் காஜாங் குற்றப் புலனாய்வுத் துறையின் D9 பிரிவுகளால் டெங்கில், புக்கிட் புச்சோங் மற்றும் புக்கிட் ராஜா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் உமர் கான் ( Hussein omar khan ) தெரிவித்தார்.
கொள்ளையின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மஞ்சள் நிற பெரோடுவா மைவி கார், மூன்று கை தொலைபேசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய துணிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக உசேய்ன் கூறினார். இதுவரை செமினியில் நடைபெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களிலும் அந்த சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது.