Latestமலேசியா

மாணவியை அவமானப்படுத்திய வைரல் காணொளி; காவல்துறை விசாரணை

கோலாலும்பூர், மே 28- அண்மையில், காஜாங் வட்டார பள்ளியொன்றில், செய்யாத தவற்றை ஒப்புகொள்ளச் சொல்லி, மாணவி ஒருவரை, ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரும் காணொளியைப் பார்த்த வலைத்தளவாசிகளும் எந்தப் புகாரும் செய்யாத நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரொருவர், நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உண்மையை கண்டறிய காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

அவ்வழக்கு, குழந்தைகள் சட்டம் மற்றும் தொடர்புத்துறை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட்டுக்கு அபராதமும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!