
பட்டர்வெர்த், மே 28- கடந்த மே 16-ஆம் தேதியன்று, பட்டர்வெர்த் ஜாலான் ராஜா ஊடாவில், 36 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய 4 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கொலை முயற்சி செய்யும் நோக்கில் அக்குற்றத்தைப் புரிந்த அந்நால்வர் மீதும், குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், அனைவருக்கும் தலா 7,000 ரிங்கிட் ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது.
அவ்வழக்கு வருகின்ற ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.