Latestமலேசியா

காணாமல் போன முத்துகுமரனும் மகனும் கண்டுபிடிப்பு; தகவல் வழங்கிய யுகேஸ்வரனுக்கு குடும்பத்தார் நன்றி

ஸ்தாபாக் – ஜூன் 8 – ஸ்தாபாக் – ஆயேர் பானாஸ், ஜாலான் கெந்திங் கிளாங், PV 21 என்ற அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஜூன் 7ஆம் திகதி காணாமல் போன 45 வயது தொழில்முனைவர் முத்துக்குமரன் மற்றும் அவரது மகன் மஹா ஈஸ்வர் இருவரும் இன்று மதியம் 2.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவ்வேளையில் தகவல் கொடுத்து அவர்களை கண்டுபிடிக்க உதவிய யுகேஸ்வரன் என்பவருக்கு குடும்ப உறுப்பினர்கள் நன்றி கூறிக் கொண்டுள்ளனர்.

அவ்விருவரும் காணாமல் போன தலவல் செய்தியாக வெளியிடப்பட்டு 2 மணி நேரங்களிலேயே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக கடப்பாட்டுடன் தகவலை பகிர்ந்து அனைவருக்கும் குடும்பத்தார் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!