
மலாக்கா, ஜூன்-18 – 50,000 ரிங்கிட் நிதி மோசடி புகார் தொடர்பான விசாரணைகளுக்காக, மலாக்காவில் உள்ள ஒரு கோயில் தலைவரும் செயலாளரும் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முறையே 61 மற்றும் 75 வயதிலான அவ்விரு ஆடவர்களையும் தடுத்து வைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC செய்த விண்ணப்பத்தை மலாக்கா மேஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இருவரும் நேற்று காலை 11 மணிக்கு மேல் மலாக்கா MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைதானதாக அறியப்படுகிறது.
நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் ஆலய நிதியை மீட்டதன் மூலம் அதிகாரத்தையும் பதவியையும் துஷ்பிரயோகம் செய்ததாக அவர்கள் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர்.
அப்பணம் அவர்களின் சொந்த உபயோகத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.