Latestமலேசியா

நீலாயில் சண்டை; 4 பேர் கைது; காயமடைந்தவருக்கு 400 தையல்கள்

நீலாய், ஜூன் 25 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, நெகிரி செம்பிலான் பண்டார் பாரு நீலாயில் ஒரு துரித உணவு உணவகத்தின் முன் நடந்த சண்டையில் காவல்துறையினர் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரை கத்தியால் வெட்டியதால் அவரது உடல் முழுவதும் சுமார் 400 தையல்கள் போடப்பட்டதாக நீலாய் காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த நான்கு சந்தேக நபர்களும் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உதவுவதற்காக நாளை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த அந்நபரை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!