Latestமலேசியா

டேக்சியில் ஏறிய மாணவியை மானபங்கம் செய்ததாக முதிய ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

மூவார், ஆகஸ்ட்-4- கடந்த மே மாதம் தனது டேக்சியில் ஏறிய ஒரு மாணவியை மானபங்கம் செய்ததாக 76 வயது முதியவர் மீது, ஜோகூர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

மே 13-ஆம் தேதி குளுவாங், Jalan Mohd Salim சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் இரவு 8.30 மணிக்கு 16 வயது மாணவியிடம் அக்குற்றத்தைப் புரிந்ததாக, அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க வகை செய்யும் 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும், Low Fatt Tham எனும் அம்முதியவர் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினார்.

இதையடுத்து 10,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவரை ஜாமீனில் விடுவித்த நீதிபதி, செப்டம்பர் 4-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!