
தைப்பிங், ஏப்-3-மாது, கணவர் மற்றும் மாமனார், மாமியாரும் சேர்ந்து, கடந்த வாரம் தங்களது 9 வயது மகளைக் கொன்றதாக தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.
குடும்பத்தில் நால்வரான 28 வயது சாவித்ரி, அவரது கணவரான 27 வயது சத்திஸ் குமார், சத்திஸ் குமாரின் பெற்றோர்களான 53 வயது வீரலெட்சுமி மற்றும் 49 வயது முரளி ஆகியோர், மாஜிஸ்திரேட் ஆர். பிரபாகரன் முன்னிலையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பாளர் வாசித்த குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொண்டனர்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், தனித்தனியாக வாசிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.
தனித்தனியாக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நான்கு குற்றவாளிகளும் கடந்த மாதம் 26 ஆம் தேதி காலை, தைப்பிங்கில் உள்ள தாமான் சுங்கை மாஸ், ஜாலான் 14 இல் உள்ள ஒரு வீட்டில், 9 வயது தானவிதாவை கொலை செய்ததாகக் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும், அல்லது மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆனால் 40 ஆண்டுகளுக்கு மிகாமல், மற்றும் 12 முறைக்குக் குறையாமல் பிரம்படி தண்டனை விதிக்க வகை செய்கிறது.
அரசு தரப்பில் ஃபரிஹா அடிலா ஃபஸியால் ஆஜரான நிலையில் குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
பாதிக்கப்பட்டவரின் சார்பில் வழக்கறிஞர்கள் தினேஷ் தேவநேசன் கணேசன் மற்றும் லோ ட்ஸே கென் ஆகியோர் பார்வையாளர்களாக இந்த விசாரணைக்கு வந்திருந்தனர்.
கொலை வழக்கில் பிணை வழங்க முடியாது என்பதால், நீதிமன்றம் மே 15 ஆம் தேதி தடயவியல், பிணக்கூறு பரிசோதனை மற்றும் டிஎன்ஏ அறிக்கைகளுக்காக அடுத்த விசாரணைத் தேதியை நிர்ணயித்தது.
இதற்கிடையில், நீதிமன்றத்திற்கு வெளியே தினேஷ் கூறுகையில்,
தனவிதா தனது தாயார் சவித்ரியுடன் மூன்று வயது முதல் வசிக்கவில்லை என்றும், சில மாதங்களுக்கு முன்புதான் அவருடன் மீண்டும் வசிக்கத் தொடங்கினார் என்றும் கூறினார்.
ஐந்து வருடங்கள் சாவித்ரியுடன் வசிக்காதபோது, பாதிக்கப்பட்டவர் சாவித்ரியின் குடும்பத்தின் தூரத்து உறவினரால் பராமரிக்கப்பட்டு வந்தார்.
சில மாதங்களுக்கு முன்புதான் சாவித்ரி தானவிதாவின் பாதுகாப்பை மீண்டும் கோரினார்.
தானவிதா, சாவத்ரியின் முதல் திருமணத்தில் பிறந்த அவரது சொந்த மகள் என்றும், சத்திஸ் குமார் சாவத்ரியின் மூன்றாவது கணவர் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம், தைப்பிங் மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான காயங்களுடன் உயிரிழந்த ஒரு சிறுமியைத் தொடர்ந்து, 27 முதல் 53 வயதுடைய ஆண், பெண் இருவர் உட்பட நான்கு குடும்ப உறுப்பினர்களை காவல்துறை கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



