Latestமலேசியாவிளையாட்டு

KL City – JDT ஆட்டத்திற்குப் பிறகு ரசிகர்கள் கலாட்டா; கற்களும் பட்டாசுகளும் பறந்தன- விசாரணை அறிக்கைத் திறப்பு

கோலாலம்பூர், மே-27, வெள்ளிக்கிழமை இரவு செராசில் உள்ள கோலாலம்பூர் விளையாட்டரங்கில் JDT – KL City அணிகள் மோதிய மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்திற்குப் பிறகு, இரசிகர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

ஆட்டம் முடிந்ததும் அரங்கிற்கு வெளியே பொறுப்பற்ற சில நபர்கள் கற்களையும், பட்டாசுகளையும் JDT இரசிகர்களை நோக்கி வீசுவது Fr7 Reborn என்ற YouTube பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில் தெரிகிறது.

எனினும் அவர்களின் அச்செயலை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் கண்டுகொண்டதால், நிலைமை எல்லை மீறிப் போவது தடுக்கப்பட்டது.

இருந்தாலும் போலீஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

சூப்பர் லீக் கிண்ணத்தை பத்தாண்டுகளாக தொடர்ந்து வென்று வந்துள்ள JDT, அவ்வாட்டத்தில் 5-1 என்ற பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

KL City – JDT அணிகள் சந்திக்கும் போது இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவது இது முதன் முறையல்ல.

கடந்த பருவத்தில் JDT இரசிகர்களை ஏற்றியிருந்த பேருந்தின் மீது கற்கள் வீசப்பட்டு, அதன் கண்ணாடிகள் உடைந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!