Latestமலேசியா

KLIA அனைத்துலக விமான நிலையத்தின் 1ஆவது, 2ஆவது முனையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் கண்காணிப்பு

புத்ரா ஜெயா, ஏப் 19 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது மற்றும் 2 ஆவது முனையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் ஆயுதம் ஏந்திய போலீஸ்காரர்கள் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். KLIA IPD போலீஸ் தலைமையகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உள்துறை துறை பாதுகாப்புத்துறை மற்றும் பொது அமைதிப் பிரிவின் பொது நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களும் இந்த பணியில் ஈடுபட்டிருப்பதாக போலீஸ் படையின் தலைவர் Razarudin Hussain தெரிவித்தார். முதலாவது முனையத்தில் 23 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், 2ஆவது முனையத்தில் 14 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தினசரி மூன்று ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என Razaruddin கூறினார். 1 ஆவது மற்றும் 2 ஆவது முனையத்தில் பயணிகள் புறப்படும் மற்றும் பயணிகள் வந்தடையும் 8 பகுதிகளில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!