கோலாலம்பூர், பிப் 6- 2023ஆம் ஆண்டு எஸ்.பி.எம் வரலாறு பாடத்திற்கான தேர்வு தாள் கசிந்ததாக வெளியான தகவல் குறித்து கல்வி அமைச்சு விசாரணை நடத்தும். இந்த குற்றச்சாட்டு உண்மையானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார். எனினும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப பொதுத் தேர்வை கண்காணிக்கும் பணி உயர்ந்த நம்பகத்தன்மையோடு மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணை நடத்தும். இந்த செய்தியினால் நமது பிள்ளைகள் கவலைப்படக்கூடாது அவர்களைப் பொறுத்தவரை இப்போது நடைபெற்றுவரும் எஸ்.பி.எம் தேர்வில் கவனம் செலுத்தி வரவேண்டும். நாங்கள் முழு பொறுப்புணர்வோடு விரிவான விசாரணையை மேற்கொள்வோம் என ஃபத்லினா சிடெக் கூறினார்.