Latestமலேசியா

6 ஆண்டிற்கு நஜீப் வீட்டுக் காவலில் வைக்கப்படுவதற்கான ஆவணங்களை குறித்து எந்தத் தகவலும் தெரியாது – சைபுதீன்

புத்ராஜெயா, ஏப்ரல் 4 – முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு பேரரசரால் வழங்கப்பட்ட பகுதி மன்னிப்பில் எஞ்சிய 6 ஆண்டு சிறைத் தண்டனையை, வீட்டுக் காவலில் வைத்திடும் வகையில் கூறப்படும் கூடுதல் விவரம் எதுவும் தனக்கு தெரியாது என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டிலேயே கழிக்க நஜிப்பின் வழக்கறிஞரிடமிருந்து விண்ணப்பக் கடிதம் மட்டுமே தனக்குக் கிடைத்ததாக இன்று புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் அலுவலத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அரச மன்னிப்பில் வீட்டு காவலில் வைப்பதற்கான கூடுதல் ஆவணம் எதுவும் இருந்ததா என்பது பற்றி தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்றும், விரைவில் பொருத்தமான நேரம் வரும்போது அது பற்றி பதிலளிக்கப்படும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!