Latestமலேசியா

கனமழையால் கினாபாலு மலையில் நீர் பெருக்கம்; 49 மலையேறிகள் மீட்பு

கோத்தா கினாபாலு, டிச 5: கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து, கினாபாலு மலையில் சிக்கியிருந்த 49 மலையேறிகள் பத்திரமாக மீட்கப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.50 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழையால் மலையிலிருந்து அதிகமான நீர் கீழே பெருக்கெடுத்தது என சபா பூங்கா இயக்குநர் டாக்டர் மக்லரின் லகிம் கூறினார்.

இந்த மீட்பு நடவடிக்கையில் மலையேறும் நடவடிக்கைக்கான வழிகாட்டிகளும், சுமை தூக்குபவர்களும் உதவினர் என்றும் அவர் தெரிவித்தார்.

நீர்வீழ்ச்சி போன்று அங்கு நீர் வடிந்தோடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அவை வைரலாகியிருந்தன.

கினாபாலு மழையில் கனமழையால் மலையேறும் பாதைகளில் வெள்ளம் ஏற்படுவது இது முதல் முறையல்ல.

இதனிடையே, பாதுகாப்பு காரணமாக மலையேறும் நடவடிக்கைகளுக்கு சபா பூங்கா தற்காலிகமாக தடை விதிக்கவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!