அலோஸ்டார், டிச 6 – பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் கெடா பாலிங்கில் மூன்று கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கம்போங் இபோ, கம்போங் சாடேக் மற்றும் கம்போங் பாடாங் ஆகியவவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாக பாலிங் மாவட்ட சிவில் தற்காப்பு படை அதிகாரி முகமட் பாய்சோல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
சுங்கை பாலிங் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடியதால் அருகேயுள்ள வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். பல கிராமங்கள் திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாக முகமட் பாய்சோல் கூறினார்.
எனினும், தற்காலிக வெள்ள நிவாரண முகாம் எதுவும் திறக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.