Latestமலேசியா

பத்துகேவ்ஸ் , கம்போங் லெக்சமனா பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி ஆலயத்தில் 22ஆம் ஆண்டு மகா உற்சவம்

கோலாலம்பூர், டிச 14 – பத்துமலை, கம்போங் லக்சமானாவில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி ஆலயத்தின் 22-ஆம் ஆண்டு மகா உற்சவம் இம்மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

காலை 7.30 மணி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கும் மகா உற்சவம், நண்பகல் மகேஸ்வர பூஜைக்குப் பின் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயதின் மகா உற்சவத்தை முன்னிட்டு பத்துமலை வட்டாரத்தில் உள்ள வசதிக் குறைந்த 130 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களும் வழங்கப்படவிருப்பதாக பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி ஆலயத்தின் தலைவர் குருஜி சுவாமி சுந்தரேஸ்வரர் தெரிவித்தார்.

எனவே, இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!