
ஜோகூர் பாரு, மே 16 – அண்மையில் மாநிலத்திலுள்ள ஆறுகளில் பொறுப்பின்றி குப்பைகளை கொட்டுவோர் குறித்து கவலை தெரிவித்த ஜோகூர் இடைக்கால சுல்தான் , பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இத்தகையோர் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஆறுகளில் குப்பைகளை கொட்டுவோரின் நடவடிக்கையினால் அவற்றை சுத்தம் செய்வதற்கு பொதுமக்களின் பணத்தை பெரிய அளவில் செலவிடும் சுமையை மாநில அரசாங்கம் எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.
எனவே விருப்பம்போல் ஜோகூர் மாநிலத்தில் ஆறுகள் மற்றும் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டங்களை கடுமையாக்கும்படி Tunku Mahkota Ismil பணித்துள்ளார்.
அண்மையில் பலர் பொறுப்பின்றி ஆறுகளில் குப்பைகள் கொட்டுவதை தாம் கேள்விப்பட்டதோடு இதனை நேரில் பார்த்தது குறித்து தாம் கவலை அடைந்ததாகவும் ஆறுகளை சுத்தம் செய்வதற்காக செலடப்படும் மக்களின் பணம் உண்மையில் அவர்களது மேம்பாட்டிற்காக செலவிடப்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதோடு ஆறுகள் மற்றும் கண்ட இடங்களில் குப்பைகளை கொண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் விவாதிக்க வேண்டும் என ஜோகூர் சட்டமன்ற கூட்டத்தை இன்று தொடக்கிவைத்து உரையாற்றியபோது Tunku Mahkota Ismail அறைகூவல் விடுத்தார்.