புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 8 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், குவார் பெராவுவிலுள்ள, மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்கும் பட்டறை ஒன்று தீக்கிரையானது.
அதனால், அங்கு பழுது பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருந்த 23 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
இன்று அதிகாலை மணி 3.18 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதனால், பட்டறையின் 70 விழுக்காடு தீக்கிரையானதாக, பினாங்கு மாநில தீயணைப்பு மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அந்த தீ விபத்தில், உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகின்றன.