ஈப்போ, ஜூலை 16 – கார் வாடகை நிறுவனத்தின் ஊழியர் நுர் பாரா கார்த்தினி படுகொலை தொடர்பில் கைதான சந்தேகப் பேர்வழி போலீஸ் லான்ஸ் காப்பரல் என பேரா போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி மாட அரிஸ் (Azizi Mat Aris ) இன்று உறுதிப்படுத்தினார். அந்த சந்தேகப் பேர்வழி சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என அவர் தெரிவித்தார். இந்த படுகொலையில் கைதான அரசு ஊழியர் ஒரு போலீஸ்காரர் என்பதை தாம் உறுதிப்படுத்துவதாகவும் கடந்த ஐந்த ஆண்டு காலமாக அந்த நபர் போலீஸ் படையில் இருந்துள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அஸிஸி கூறினார்.
நுர் பாராவின் காதலர் என நம்பப்படும் அந்த போலீஸ்காரர் சிலாங்கூர், கோலா குபு பாருவில் Gedangsa போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உலு சிலாங்கூரில் உள்ள Kampung Sri Kledang செம்பனை தோட்டத்தில் நுர் பாராவின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக இதற்கு முன் சிலங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் ( Hussein omar Khan ) உறுதிப்படுத்தியிருந்தார்.