
கேரளா, ஆக. 7 – கேரளாவில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதான தன்னார்வ மீட்புப் பணியாளர் ராஜேஷ், 61 வயது விவசாயியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரையே தியாகம் செய்த சம்பவம் இந்தியா முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியிருந்த முதியவரை அடைந்த ராஜேஷ், அவரை பாதுகாப்பாக மீட்கும் நோக்கில் தான் அணிந்திருந்த உயிர்க் காப்பு கவசத்தையே கழற்றி அவருக்கு அணிவித்தார்.
முதியவர் உயிருடன் கரை சேர்ந்த நிலையில், உயிர்க் காப்பு கவசம் இன்றி இருந்த ராஜேஷ் வெள்ளத்தின் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
பல நாட்கள் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, அவரது உடல் மீட்கப்பட்டது.
ஒரு அந்நியரின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்த ராஜேஷின் தியாகம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
“உண்மையான ஹீரோ”, “மனிதநேயத்தின் முகம்”, “தன்னை மறந்து பிறருக்காக வாழ்ந்த வீரன்” என ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராஜேஷின் வீரச் செயல், ஒரு உயிரைக் காப்பாற்ற தனது உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்காத மனிதநேயத்தின் உயரிய எடுத்துக்காட்டாக பலராலும் போற்றப்பட்டு வருகிறது



