![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-10-53-AM-1202.jpg)
வாஷிங்டன், மே 27 – அமெரிக்காவின், டெக்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாநிலங்களை சூறாவளி தாக்கியதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
குறிப்பாக, டெக்சாஸ் மாநிலத்தில் மட்டும் இதுவரை எழுவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதனால், அங்கு அவசர காலம் கையெழுத்திடப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறப்பு நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் வீடுகளும், எண்ணெய் நிலையங்களும் மோசமாக சேதமடைந்துள்ள வேளை ; வாகனங்கள் பல சாலைகளில் கவிழ்ந்து கிடக்கின்றன.
ஓக்லஹோமாவை, உள்நாட்டு நேரப்படி நேற்று மாலை தாக்கிய சூறாவளியில் குறைந்தது இருவர் உயிரிழந்த வேளை ; ஆர்கன்சாஸ் மாநிலத்தில், மரண எண்ணிக்கை ஐந்தாக பதிவாகியுள்ளது.
கென்டக்கி நகரான லூயிஸ்வில்லில் ஒருவர் உயிரிழந்தார்.