![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-12-Mar-2024-06-02-PM-3114.jpg)
குவாந்தான், மார்ச்-12, வயதுக் குறைந்த பையன் உள்ளிட்ட இரு ஆடவர்களிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துக் கொண்ட 40 வயது பூசாரி போலீசிடம் சிக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 16 வயது பையனும், 21 வயது இளைஞனும் நேற்று செய்த போலீஸ் புகாரை அடுத்து, சில மணி நேரங்களிலேயே தனது வீட்டில் வைத்து பூசாரி கைதுச் செய்யப்பட்டார்.
அதில், அவ்விளைஞன் 2022-ஆம் ஆண்டு முதலே பூசாரியின் வலையில் சிக்கி தொல்லைகளை அனுபவித்து வந்துள்ளான்.
ஆனால், தமக்கு சோறு போடுவதே அந்த கோயில் வேலை தான் என்பதால், வெளியில் யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கி வந்திருக்கின்றான்.
எனினும், வேலையை விட்டு விலகியதும், தனது பாதுகாப்புக் கருதி, அவன் போலீசில் புகார் செய்தான்.
இவ்வேளையில், கடந்த மாதம் அப்பூசாரியின் ‘இம்சைகளுக்கு’ ஆளாகி பெரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக 16 வயது பையன் தனது போலீஸ் புகாரில் கூறியுள்ளான்.
சந்தேக நபர் விசாரணைகளுக்காக மார்ச் 18 வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதை குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு உறுதிபடுத்தினார்.
2017 சிறார் வன்கொடுமைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.