
குபாங் பாசு, ஆகஸ்ட்-5,கெடாவில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயமானது தொடர்பாக புக்கிட் காயு ஹீத்தாம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
36 வயதான Siti Zulaikha Ahmad Sabri, அவரது 39 வயது கணவர் Khairul Azhar Ahmad மற்றும் அவர்களின் மகன் Adid ஆகிய மூவரே மாயமாகியுள்ளனர்.
ஜூலை 20 முதல் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், சிறுவன் பள்ளிக்கு வரவில்லை என்பதை அறிந்த பின்னரும், பெண்ணின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வீட்டு CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், திங்கள் அதிகாலை 1.12 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு வந்து, மீண்டும் 2.20 மணிக்கு அதே காரில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.
இவர்களைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு போலீஸாரும் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



