Latestமலேசியா

செந்தூலில், மோப் கட்டை, பேஸ்பால் மட்டையை கொண்டு மனைவியை அடித்த ஆடவன் ; குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்

கோலாலம்பூர், ஜூன் 11 – தனது மனைவியை, “மோப்” கட்டை மற்றும் “பேஸ்பால்” மட்டையால் அடித்ததோடு, அவரை நோக்கி வெள்ளை பிளாஸ்டிக் நாற்காலியை எரிந்த குற்றச்சாட்டை, ஆடவன் ஒருவன் ஒப்புக் கொண்டான்.

45 வயது இந்தர்ஜித் சிங் (Inderjit Singh) எனும் அவ்வாடவன், தனது மனைவியான சுக்விந்தர் கவுருக்கு (Sukhvinder Kaur) எதிராக, கடந்த மாதம் ஐந்தாம் தேதி, செந்தூல், ஜாலான் ஈப்போவிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படிகள் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு விதிக்கப்படலாம்.

நான்காயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் இந்தர்ஜித் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூலை 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!