Latestமலேசியா

செர்டாங் போலீஸ் நிலையத்தில் பூச்சாடியை வீசிச் சென்ற 2 ஆடவர்களைப் போலீஸ் தேடுகிறது

செர்டாங், ஜூன்-3, தலையில் ஹெல்மட் அணியாதக் காரணத்தால் போலீஸ் கடிந்துக் கொண்டதால் அதிருப்தி அடைந்த இரு ஆடவர்கள், சிலாங்கூர், செர்டாங் போலீஸ் நிலையத்தில் பூச்சாடியைத் தூக்கி எறிந்துச் சென்றுள்ளனர்.

அச்சம்பவம் ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.

திடீரென மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இருவரிடம், அங்குப் பணியில் இருந்த போலீசார் விவரம் கேட்டிருக்கிறார்; ஆனால், போதையில் இருந்ததாக நம்பப்படும் அவர்கள் பூச்சாடியை வேலி அருகே வீசி விட்டு விருட்டென தப்பியோடினர்.

அவர்கள், முன்னதாக அதிகாலை 2.30 மணிக்கு செர்டாங் போலீஸ் நிலையம் அருகே, சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் தலையில் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றிய ஆடவர் கும்பலைச் சேர்ந்தவர்களே என பின்னர் தெரிய வந்தது.

ஹெல்மட் அணியாததால் போலீசார் எச்சரிக்கையாகப் பேசியதை மனதில் வைத்து தான், அவ்விருவரும் பூச்சாடியை வீசி விட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ள போலீஸ், சதிநாச வேலையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ் அச்சம்பவத்தை விசாரிக்கிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் செர்டாங் போலீஸ் நிலையத்தைத் தொடர்புக் கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!